பாவங்கள் என்பது என்னென்ன என்பதைத் தெரிந்துக்கொண்டு, அதைச் செய்யாமல் இருக்க நம்மில் பலரும் முனைகிறோம்.
அத்தகையோருக்கு தருமத்தை போதிக்கும் பெளத்தம், முதலில் மனிதனால் செய்யப்படும் பாவங்களைப் பகுத்து கூறுகிறது.
இவ்வகையான பாவங்களை புரியாமல் இருப்பதும் தருமமே என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது.
மனிதன் தனது உடலால் செய்யும் பாவங்களை மூன்றாக பிரித்து, அதனைத் தெளிவாக விளக்குகிறது பெளத்தம்.
உடலால் செய்யப்படும் பாவங்களாவன:
1. பிராணாதிபாதம்
ஹிம்சை புரிதல், தன் கரங்களில் இரத்தக்கறை படும்படியான வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பிராணிகளிடம் அன்பாக இருக்காமல், வதை செய்தல்.
2. அதின்ன தானம்
திருட்டுக் காரியங்களைச் செய்தல், பிறருக்குச் சொந்தமான உடமைகளை, அந்நபருக்குத் தெரியாமல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவையான கள்ளத்தனங்கள்.
3. காமத்தில் தவறு செய்தல்
பிறன் மனை நோக்குதலையே காமத்தில் செய்யும் தவறு என்க்றது பெளத்தம்.





