
வீடுபேறு பேறுவதற்கு முதற்படியாக விளங்குவது பற்றினை அறுத்து யான் எனது என்ற இருவகை உலகைப்பற்றை, விளக்கி அதனின்று வெளிவருவது. சொல், உணர்ச்சி, கருத்துக் கோவை எல்லாம் சத்தியத்தை மூடி மறைக்கும் போர்வையாகும். மனித மனத்தை அருள்வழிப்
அசை என்னும் கடலில்
பகலும்,இரவும், அந்தியும், உதயமும்,
மாரியும் வசந்தமும் மாறி மாறி வருகின்றன.
காலம் கதியாக ஓடுகிறது.
வாழ்க்கை விரைவாக கழிகிறது.
அப்படியும் ஒருவன் தன் சைக்
காற்றை விட்டுவிட மறுக்கிறான்.
காலைபகல் மாலைஎன் ஓடியுள நாட்கள் தொகை
யார்கணக்கில் கூற இயலும் ?
கார்காலம் கோடைபணி காற்று வரு பருவமென
காலவட்டம் போனது எத்தனை
நாளையெனும் காலமது நாள்கடர நாள் கடர
இன்றாக மாறி விடுமே
நடக்கின்ற காலமது நாழிகைகள் ஓடியபின்
நேற்றென்ற பெய ராகுமே
கோலமிட்ட பூமியினிலே மாறிவரும் வண்ணங்கள்
கோடிபல கோடி எனினும்
கொந்தளிக்கும் மாந்தனவன் நெஞ்சிலவன்
ஆசையினை கொஞ்சமும் விட வில்லையே.
ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்
கைப்பாசத்தில் அல்லற்பட இருந்தேனே,
நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலை
மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ?
ஈசர் பாகத்து நேரிழையே. [ -அபிராமி அந்தாதி ]
அகந்தை
என் உடைமை , என் மக்கள், என் யெளவனம்
என்று ஆணவம் கொள்ளாதே.
காலம் ஒரே நிமிடத்தில் இவற்றினை
சூறையாடி சென்று விடும்.
இவற்றின் மாயையான தன்மையை
உணர்ந்து இவைகளை விடுத்து,
பிரம்ம நிலையை எய்த முனைவாயாக !
ஆளடிமை வாகனங்கள் மாளிகை கொண்டுவரும்
ஆணவத்தில் என்ன பயனோ ?
அன்புமக்கள் சுற்றமொடு அண்டியவை சீர்த்தி என்னும்
அகந்தையினால் என்ன விளைவோ ?
வாழ்வுபெறும் காலமதில் வாலிபத்தின் ஆணவத்தில்
வந்துதித்த வெற்றி நிலையோ ?
வார்த்தைகளில் சொல்ல முடியாதபடி காலமது
வற்றிவிடச் செய்யும் நொடியில்
பாழ்படுத்தும் மாயைநிலை பற்றாதுன் சிந்தையில்யினில்
பரம்பொருளை எண்ணி விடு நீ
பரமார்த்தம் பள்ளிகொளும் அந்தரங்கக் கோயில் தரும்
படையலுக்கு முந்தி விடு நீ
'' கெட்டவழி ஆணவப் பேய் கீழாக மேலான
சிட்டருனைப் பூசை செய்வார் பாரபரமே.
- தாயுமானவர் -
நாடக வேடம்
ஒருவன் சந்நியாசி போன்று ஜடாமுடியுடனும்,
ஒருவன் மொட்டைத் தலையுடனும்,
ஒருவன் காஷாய உடையுடன் பவனி வந்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
உண்மையில் இந்த வேடமும் உடைகளும் அவர்களுடைய
வயிற்று பிழைப்புக்குதான்.
வேடமிட்ட நாடகமாய் ஆடுகின்ற பூமியின்
வேதனையின் உருவமெத்தனை
வேண்டாத தாடிசடை தான் வளர்த்து சன்யாச
வேற்றுமையின் பாக மெத்தனை
காவிகட்டி ஊர்சுற்றி தான்பவனி தந்து சுழல்
காட்சிகளும் விந்தைகளும் எத்தனை
காயமதில் தன் தலையை மொட்டையிட்டு மற்றவர்க்கு
காட்டுகின்ற பேர்க ளெத்தனை
அவ்வளவு பேர்களுமே தன்வயிற்றைத் தான் வளர்க்க
ஆக்கி வைத்த சொந்த வழியே
கூடுவிட்டுப் போனவர்கள் கொள்கைவற்றி போனவர்கள்
கூட்டத்தை நம்பிடாதே .
நாடகத்தால் உன் அடியார்
போல்நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவேன்
மிகப் பெரிதும் விரைகின்றேன்
ஆடு அகம் சீர் மணிக்குன்றே
இடையறா அன்பு உனக்கு என்
ஊடு அகத்தே நின்று உருகத்
தந்தருள் என் உடையானே.
திருவாசகம் [ திருச்சதகம்]
தீமையும் - தினவும்
மனிதன் சிற்றின்பங்களில் திளைத்து இன்புறுகிறான்.
அதனால் விந்தினை பாழாக்கி தேகத்தில்
நோய்களை தனதாக்கிக்கொள்கிறான்.
உலகத்தில் இறுதியான முடிவு மரணம்தான்
என்றாலும் மனிதன் தனது பாவ நடத்தைகளை
விடுவான இல்லை.
காமமெனும் ஏரியினைக் கால் கடுக்க நீந்தியவர்
கரையேற வழியின்றியே
கண்ணிமைக்கும் சிற்றின்பக் கள்ளூரும் போதையிலே
காலத்தை ஓட்டி மகிழ்வார்
எமனுக்குச் சீட்டெழுதி வேதனைக் கூட்டெழுதி
எத்தனையோ விருந்து வைப்பார்.
இறுதி ஒருநாள் சாவு உறுதி என்ற போதிலும்
எண்ணாமல் நாள் கழிப்பார்.
ஊமை மனம் ஆகிடுவார் ஆமையென வாழ்ந்திடுவார்
உத்தமரை பூமி சுமந்தே
உள்ளவரை சத்தியமும் நித்தியமாய் வாழுமதால்
உலகம் நிலைத்திருக்கும்
கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டிக் அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்டமிருக்க நமனில்லை தானே.
- திருமந்திரம் -






